Veda Gyanam

We're open for new collaborations.
News to be updated weekly.

வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும் பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு பேதை பாலகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே. மனிசர் தாம் – மநுஷ்யர்கள் வேதம் நூல் – வேதசாஸ்திரத்திற்படியே நூறு பிராயம் புகுவரேலும் – நூறுபிராயம் வாழ்ந்திருப்பர்களேயானாலும் பாதியும் – அந்த சதாயுஸ்ஸில் பாதியான ஐம்பது வருஷமும் உறங்கி போகும் – உறக்கத்தாலே கழியும்; நின்ற இப்பதினையாண்டு – மிகுந்த ஐம்பது […]

Written by

×

,

  874 -Divyaprabhandham

வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்

பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு

பேதை பாலகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

  1. மனிசர் தாம் – மநுஷ்யர்கள்
  2. வேதம் நூல் – வேதசாஸ்திரத்திற்படியே
  3. நூறு பிராயம் புகுவரேலும் – நூறுபிராயம் வாழ்ந்திருப்பர்களேயானாலும்
  4. பாதியும் – அந்த சதாயுஸ்ஸில் பாதியான ஐம்பது வருஷமும்
  5. உறங்கி போகும் – உறக்கத்தாலே கழியும்;
  6. நின்ற இப்பதினையாண்டு – மிகுந்த ஐம்பது வருஷம்
  7. பேதை – சிசுவாயிருக்கும் அவஸ்தையாயும்
  8. பாலகன் – ‘சிறுபயல்’ என்னும்படியான அவஸ்தையாயும் அது ஆகும் – நெஞ்சால் நினைக்கவும் தகாதயௌவநாவஸ்தையாயும்
  9. பிணி – வியாதிமயமாயும்
  10. பசி – ஐந்து இந்திரியங்கட்கும் ஐந்து விஷயங்களிலுமுண்டான ஆசையைத் தொலைக்கும் காலமாயும்
  11. மூப்பு – கிழத்தனமாயும்
  12. துன்பம் – மற்றும் பல துன்பங்களாகவும் கழியும்;
  13. ஆதலால் – இப்படி ஆயுஸ் முழுவதும் அநர்த்த பரம்பரையாய்க் கழிகிறபடியால்
  14. பிறவி – ஜந்மத்தை
  15. வேண்டேன் – விரும்புகிறேனில்லை.

Leave a Reply with your comments on the topic of interest to you.

Powered by WordPress.com.

%d bloggers like this: