Veda Gyanam

We're open for new collaborations.
News to be updated weekly.

877

மறம்சுவர் மதிளெடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு

புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போதறிய மாட்டீர்

அறம்சுவராகி நின்ற அரங்கனார்க் காட்செய்யாதே

புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே.

  1. மறம் சுவர் – கொடுமையாகிற சுவரை
  2. மதிள் எடுத்து – மதிளாக எழுப்பியும்
  3. மறுமைக்கு – ஆமுஷ்மிக பலத்திற்கு
  4. வெறுமை பூண்டு – ஏழ்மையை மேற்கொண்டும் இருக்கிற நீங்கள்
  5. புறம் சுவர் – வெளிச்சுவராய்
  6. ஓட்டை – அநித்யமான
  7. மாடம் – சரீரமானது
  8. புரளும்போது – தரையில் விழும் காலத்தை
  9. அறியமாட்டீர் – அறியமாட்டீர்
  10. அறம் சுவர் ஆகிநின்ற – தர்மமே ப்ரக்ருதியாக நிற்கிற
  11. அரங்கனார்க்கு – அழகியமணவாளனுக்கு
  12. ஆள்செய்யாதே -அடிமை செய்யாமல்
  13. புறம் சுவர் – வெளிச்சுவரான உடம்பை
  14. கோலம் செய்து – அலங்கரித்து
  15. புள் கவ்வ – பறவைகள் கவ்விக்கொள்ளும் படி
  16. கிடக்கின்றீரே – கிடக்கின்றீர்களே.

Powered by WordPress.com.

%d bloggers like this: