வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேலும்

பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு

பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

  1. மனிசர் தாம் – மநுஷ்யர்கள்
  2. வேதம் நூல் – வேதசாஸ்திரத்திற்படியே
  3. நூறு பிராயம் புகுவரேலும் – நூறுபிராயம் வாழ்ந்திருப்பர்களேயானாலும்
  4. பாதியும் – அந்த சதாயுஸ்ஸில் பாதியான ஐம்பது வருஷமும்
  5. உறங்கி போகும் – உறக்கத்தாலே கழியும்;
  6. நின்ற இப்பதினையாண்டு – மிகுந்த ஐம்பது வருஷம்
  7. பேதை – சிசுவாயிருக்கும் அவஸ்தையாயும்
  8. பாலகன் – ‘சிறுபயல்’ என்னும்படியான அவஸ்தையாயும் அது ஆகும் – நெஞ்சால் நினைக்கவும் தகாதயௌவநாவஸ்தையாயும்
  9. பிணி – வியாதிமயமாயும்
  10. பசி – ஐந்து இந்திரியங்கட்கும் ஐந்து விஷயங்களிலுமுண்டான ஆசையைத் தொலைக்கும் காலமாயும்
  11. மூப்பு – கிழத்தனமாயும்
  12. துன்பம் – மற்றும் பல துன்பங்களாகவும் கழியும்;
  13. ஆதலால் – இப்படி ஆயுஸ் முழுவதும் அநர்த்த பரம்பரையாய்க் கழிகிறபடியால்
  14. பிறவி – ஜந்மத்தை
  15. வேண்டேன் – விரும்புகிறேனில்லை.